Friday, May 31, 2024

நீதிக்கதை தங்க அன்னத்தின் கதை!

 நீதிக்கதை


தங்க அன்னத்தின் கதை!


ஒரு காலத்தில், ஒரு குளத்தில் பொன் அன்னம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தின் அருகே, தாய் மற்றும் இரண்டு மகள்கள் என வறுமையில் வாழ்ந்த ஒரு குடும்பம் இருந்தது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாடு சாப்பிடுவதே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள், அந்த அன்னம் அவர்களின் நிலைமையைக் கவனித்து, அந்த ஏழை குடும்பத்திற்கு உதவ முடிவு செய்தது. தனது பொன்னை போன்ற இறகுகளை ஒவ்வொன்றாகக் கொட்டி, அவற்றை விற்று வாழ்வாதாரம் நடத்த அந்தக் குடும்பத்திற்கு கொடுக்க ஒரு திட்டத்தை வகுத்தது.


அன்னம் தங்கள் வீட்டிற்கு வந்து தனது பொன்னிறகங்களை கொடுப்பதாகச் சொன்னபோது, அந்தத் தாய் ஆச்சரியப்பட்டாள். அன்றிலிருந்து, அன்னம் தினமும் தனது இறகுகளை உதிர்க்கத் தொடங்கியது, அதன் மூலம் அந்தக் குடும்பம் சந்தோஷமாகவும் வசதியாகவும் வாழ போதுமான வருமானத்தை ரூடுவு;ட்டத் தொடங்கியது. ஆனால், அந்தத் தாய் பேராசை பிடித்து, அடுத்த முறை அன்னம் தங்கள் வீட்டிற்கு வரும்போது அதன் எல்லா இறகுகளையும் பறித்து விட முடிவு செய்தாள்.


அந்தத் தாய் அன்னத்தின் இறகுகளைப் பறித்தபோது, அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால், அவை இனி பொன்னிறமாக இல்லை, சாதாரமான இறகுகளாகவே இருந்தன. தான் மனமுவந்து தன் பொன்னிற இறகுகளை கொடுத்ததாகவும், தாய் தன்னை வலுக்கட்டாயாகப் பறித்ததால், இறகுகள் இனி அதே மாதிரி இருக்காது என்றும் அன்னம் விளக்கம் அளித்தது. தாய் அன்னத்திடம் மன்னிப்பு கேட்டாள், ஆனால் அன்னம் அதே தவறை மீண்டும் செய்ய மறுத்துவிட்டு, பேராசைப்பட வேண்டாம் என்று அந்தக் குடும்பத்திடம் கேட்டுக்கொண்டு பறந்து போய்விட்டது.


நீதிக்கதை வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

 நீதிக்கதை


வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?


இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை சிறிதும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள். உடனே தளபதி வீரர்களை அழைத்து, சரி வீரர்களே... நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்... வெற்றியா தோல்வியா... நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்... சரியா?


ஆ.. நல்ல யோசனை... அப்படியே செய்வோம்... என்று வீரர்கள் சம்மதித்தனர். தளபதி நாணயத்தைச் சுண்டினான். காற்றில் மிதந்து, சுழன்று சுழன்று தரையில் நாணயம் விழுந்தது. தலை...! வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு. அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது! துணைத் தளபதி வந்தான். நாம் வென்றுவிட்டோம்... கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா... என்றான் உற்சாகத்துடன். ஆமாம்... உண்மைதான் என்று அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி. நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!


Monday, May 20, 2024

நீதிக்கதை வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

 நீதிக்கதை


வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?



இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை சிறிதும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள். உடனே தளபதி வீரர்களை அழைத்து, சரி வீரர்களே... நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்... வெற்றியா தோல்வியா... நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்... சரியா?



ஆ.. நல்ல யோசனை... அப்படியே செய்வோம்... என்று வீரர்கள் சம்மதித்தனர். தளபதி நாணயத்தைச் சுண்டினான். காற்றில் மிதந்து, சுழன்று சுழன்று தரையில் நாணயம் விழுந்தது. தலை...! வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு. அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது! துணைத் தளபதி வந்தான். நாம் வென்றுவிட்டோம்... கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா... என்றான் உற்சாகத்துடன். ஆமாம்... உண்மைதான் என்று அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி. நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!


Recent Posts

Popular Posts