Wednesday, October 16, 2024

பொய் சாட்சி சொல்ல கூடாது | Do Not Bear False Witness | Small Tamil Story

பொய் சாட்சி சொல்ல கூடாது | Do Not Bear False Witness | Small Tamil Story

ஓர் ஊரில் நல்லரசன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக்கு தகுந்தார் போல் நற்குணங்கள் பெற்றவனாக இருந்தான். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டும் குணமும் மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த மனப்பான்மை அவனிடம் இருந்தன. 


யாராவது தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்கும் துணிவும் அவனிடம் இருந்தது. அதனால், அதனால் அந்த ஊர் மக்கள் நல்லரசன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த ஊரில் வசதியாக வாழ்ந்து வந்த சிலர் நல்லரசனின் செல்வாக்கு கண்டு அவர் மீது பொறாமை கொண்டனர். 


அவர் புகழை கெடுப்பதற்கு தங்களால் முயன்ற முயற்சிகளை எல்லாம் செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியிலே முடிந்தன. பணக்காரர்கள் ஆகிய தங்கவேலும், கருப்பு சாமியும் இதனால் மனம் புழுங்கினர்.


ஏதேனும் ஒரு செயல் செய்த நல்லரசனை அவமானப்படுத்த வேண்டும் என்று துடியாய் துடித்தனர். அந்த பணக்காரர்களுக்கு நல்லரசன் எந்த தீங்குமே செய்யவில்லை. ஆனால், கோயில் திருவிழாவாக இருந்தாலும், வேறு பொது செயல்களாக இருந்தாலும் அந்த நல்ல அரசனுக்கே அனைவரும் முதல் மரியாதை கொடுத்தார்கள். இதைத்தான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 

எப்படியாவது அந்த நல்லரசனை பழிவாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்கள் அந்த ஊரில் வசித்து வந்து முனியாண்டி என்பவனை அழைத்து பேசினார்கள். அந்த முனியாண்டிக்கு ஊர் மக்களிடம் நல்ல பெயர் இருந்தது. அவனை பகடைக்காயாய் பயன்படுத்தி அந்த வல்லரசனை வீழ்த்தி விடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். 


தங்கவேலும், கருப்புசாமியும் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டினார்கள். முனியாண்டியை தங்கள் வீட்டில் அழைத்து பேசினார்கள். “முனியாண்டி, எங்களுக்காக நீ ஒரு செயல் செய்யணும்” என்று கூறி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அவன் கையில் திணித்தனர். 


ரூபாய் நோட்டுகளை பார்த்ததும் முனியாண்டிக்கு ஆசை அதிகமானது. அவன் அவர்களை நோக்கி, “உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்”  என்றான். உடனே அவர்கள் அவனைப் பார்த்து இந்த வல்லரசன் தன்னை உத்தமன் போல் காட்டிக்கொண்டு, எங்களுக்கு இந்த ஊரில் மரியாதை இல்லாமல் செய்கிறான். 


அவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு தான் உன்னுடைய உதவி தேவை என்றனர். மேலும் அவர்கள் தங்களுடைய சதி திட்டத்தை அவனிடம் விளக்கி கூறினார்கள். “எங்களுடைய மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எப்படியாவது அந்த நல்லரசனின் வீட்டில் நீ வைக்க வேண்டும். 


நாங்கள் போலீசில் புகார் கொடுத்து அவனை கைது செய்கிறோம் அவன் மூன்று லட்சம் ரூபாயை திருடியதற்கு நீ பொய் சாட்சி சொன்னால் போதும். மற்ற விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று தங்கவேலும் கருப்புசாமியும் முனியாண்டியிடம் கூறினார்கள். 


முனியாண்டி அவர்களை பார்த்து நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன் என்று கூறிவிட்டான். தங்கவேலும் கருப்புசாமியும் இதை கேட்டு மகிழ்ந்தார்கள். இந்த சதி திட்டம் அவர்களின் எண்ணம் போலவே நடந்தது. தங்கள் பணம் மூன்று லட்சம் திருடு போய்விட்டதாக அந்த இருவரும் போலீசாரிம் புகார் கொடுத்தார்கள். 


உங்களுக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டதற்கு உடனே முனியாண்டியை அழைத்து போய் காவல் நிலையத்தில் அந்த இருவரும் ஒப்படைத்தனர். அவன் காவல்துறை அதிகாரியிடம், “இந்த ஊரில் நல்லரசன் என்று ஒருவன் இருக்கிறான். 


நேற்று இரவு இவர்களுடைய வீட்டில் இருந்து பணத்தை திருடி கொண்டு வேகமாக போனது என் கண்களாலே பார்த்தேன். நீங்கள் அவனை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரிந்து விடும்” என்று அவன் கூசாமல் பொய் சாட்சி சொன்னான்.


காவலர்களும் நல்லரசன் வீட்டுக்கு சென்றனர். அவன் வீட்டை சோதனையிட்டனர் வல்லரசனுக்கு தெரியாமல் முனியாண்டி கொண்டு வந்த மூன்று லட்சம் ரூபாய் அந்த வீட்டு மூலையில் இருந்ததை காவல் அதிகாரிகள் கைப்பற்றினர். 


அவர்கள் நல்லரசனை பார்த்து, “இந்த பணம் உங்கள் வீட்டில் எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். நல்லரசன் நிதானத்தை இழக்காமல், “சார், இந்த பணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எப்படி இங்கே வந்தது என்பதும் எனக்கு தெரியாது. இதுல ஏதோ சதி திட்டம் இருக்கிறது. 

அந்த முனியாண்டியை நீங்கள் கண்காணித்தால் உங்களுக்கு விஷயம் தெரிந்து விடும். உங்களோடு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்” என்றான். ஊர் மக்களின் நன்மதிப்புக்குரியவன் வல்லரசன் என்பதால் அவனுக்கு மதிப்பு கொடுத்து காவல் அதிகாரிகள் முனியாண்டின் வீட்டுக்கு சென்று சோதனை இட்டனர்.


அவன் வீட்டிலிருந்து சில ரூபாய் கட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். அந்த கட்டுகளை சோதித்ததில் அவை அனைத்துமே கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. முனியாண்டி சிறையில் அடைக்கப்பட்டான். 

கள்ள நோட்டு வழக்கில் அவன் பெயரை சேர்த்தார்கள். அதை அறிந்த முனியாண்டி, காவல் அதிகாரியை பார்த்து, “சார், எனக்கு அது போல் புத்தி எல்லாம் கிடையாது. பணத்துக்கு ஆசைப்பட்டு உத்தமரான நல்லரசனுக்கு எதிராக போய் சாட்சி கூறினேன். 


அதுக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனை கொடுத்துவிட்டார். தங்கவேலும், கருப்புசாமியும் இருவரும் என் தான் என்னை இவ்வாறு செய்ய சொன்னார்கள். மற்றபடி கள்ள நோட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று எல்லா உண்மையும் கூறிவிட்டான். 


உடனே காவல்துறை அதிகாரிகள் தங்கவேலு மற்றும் கருப்பசாமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் நல்லரசின் மீது மக்களுக்கு இருந்தன் நன்மதிப்பு மேலும் கூடியது.


நீதி : யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது. அது ஒரு நாள் வெளிப்பட்டு பொய் சாட்சி கூறியவரே தண்டனைக்கு உட்படுத்தி விடும். எனவே, அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டு நல்லவர்களாக வாழ வேண்டும்.


Wednesday, September 4, 2024

தங்க அன்னத்தின் கதை!

தங்க அன்னத்தின் கதை!



ஒரு காலத்தில், ஒரு குளத்தில் பொன் அன்னம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தின் அருகே, தாய் மற்றும் இரண்டு மகள்கள் என வறுமையில் வாழ்ந்த ஒரு குடும்பம் இருந்தது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாடு சாப்பிடுவதே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள், அந்த அன்னம் அவர்களின் நிலைமையைக் கவனித்து, அந்த ஏழை குடும்பத்திற்கு உதவ முடிவு செய்தது. தனது பொன்னை போன்ற இறகுகளை ஒவ்வொன்றாகக் கொட்டி, அவற்றை விற்று வாழ்வாதாரம் நடத்த அந்தக் குடும்பத்திற்கு கொடுக்க ஒரு திட்டத்தை வகுத்தது.


அன்னம் தங்கள் வீட்டிற்கு வந்து தனது பொன்னிறகங்களை கொடுப்பதாகச் சொன்னபோது, அந்தத் தாய் ஆச்சரியப்பட்டாள். அன்றிலிருந்து, அன்னம் தினமும் தனது இறகுகளை உதிர்க்கத் தொடங்கியது, அதன் மூலம் அந்தக் குடும்பம் சந்தோஷமாகவும் வசதியாகவும் வாழ போதுமான வருமானத்தை ரூடுவு;ட்டத் தொடங்கியது. ஆனால், அந்தத் தாய் பேராசை பிடித்து, அடுத்த முறை அன்னம் தங்கள் வீட்டிற்கு வரும்போது அதன் எல்லா இறகுகளையும் பறித்து விட முடிவு செய்தாள்.


அந்தத் தாய் அன்னத்தின் இறகுகளைப் பறித்தபோது, அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால், அவை இனி பொன்னிறமாக இல்லை, சாதாரமான இறகுகளாகவே இருந்தன. தான் மனமுவந்து தன் பொன்னிற இறகுகளை கொடுத்ததாகவும், தாய் தன்னை வலுக்கட்டாயாகப் பறித்ததால், இறகுகள் இனி அதே மாதிரி இருக்காது என்றும் அன்னம் விளக்கம் அளித்தது. தாய் அன்னத்திடம் மன்னிப்பு கேட்டாள், ஆனால் அன்னம் அதே தவறை மீண்டும் செய்ய மறுத்துவிட்டு, பேராசைப்பட வேண்டாம் என்று அந்தக் குடும்பத்திடம் கேட்டுக்கொண்டு பறந்து போய்விட்டது.


What happened when puppy teeth broken and fall

 When a puppy's teeth break or fall out, it's a normal part of their development. Here's what happens:


1. Teething phase: Puppies are born without teeth, but their baby teeth start coming in when they're about 3-4 weeks old. This teething phase can be uncomfortable for them.


2. Tooth loss: As the puppy grows, their baby teeth start falling out, making way for permanent adult teeth. This typically happens between 3-6 months old.


3. New teeth emerge: After the baby tooth falls out, a new, permanent tooth grows in its place. This process continues until all baby teeth are replaced by adult teeth, usually by the time they're 6-7 months old.


4. Gum care: If a tooth breaks, it's essential to monitor the gum for any signs of infection, like redness, swelling, or discharge.


5. Veterinary check: If you suspect a broken tooth or have concerns about your puppy's teething, consult your veterinarian for guidance and to rule out any potential issues.


Remember, every puppy goes through this process, and with proper care, they'll have a healthy, happy smile!

Thursday, August 29, 2024

Rosie the Adventurous Rabbit

 Here's a story for you:


Once upon a time, in a tiny village nestled in a green valley, there lived a little rabbit named Rosie. Rosie was a curious and adventurous rabbit, with shiny brown fur and bright brown eyes. She loved to explore the world around her, sniffing out new sights, sounds, and smells every day.


One sunny afternoon, while hopping through the forest, Rosie stumbled upon a hidden path she had never seen before. She decided to follow it, and it led her to a beautiful garden filled with the most vibrant and colourful flowers she had ever seen.



In the center of the garden stood an enormous tree, its branches twisted and gnarled with age. Rosie felt drawn to the tree, as if it was calling to her. She approached the tree and discovered a small door carved into the trunk.


The door creaked as Rosie pushed it open, revealing a cozy room inside the tree. The room was filled with books, strange instruments, and curious objects that glowed with a soft, ethereal light.


Suddenly, a soft voice spoke to Rosie, "Welcome, little one. I have been waiting for you." Rosie looked around, wondering who was speaking to her.


A gentle, wise old owl emerged from the shadows. "I am the guardian of this tree," said the owl. "And you, Rosie, are a curious and brave rabbit. I will grant you one wish, anything your heart desires."


Rosie thought for a moment, then said, "I wish for the ability to help others and make the world a brighter, happier place."


The owl smiled, "Your wish is granted, Rosie. From this day forward, you will spread joy and positivity wherever you go."


And so, Rosie returned to her village, sharing her newfound gift with all her friends and family. She became known as the kindest rabbit in the land, and her heart remained full of love and wonder.


The end. I hope you enjoyed the story!

Friday, May 31, 2024

நீதிக்கதை தங்க அன்னத்தின் கதை!

 நீதிக்கதை


தங்க அன்னத்தின் கதை!


ஒரு காலத்தில், ஒரு குளத்தில் பொன் அன்னம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் குளத்தின் அருகே, தாய் மற்றும் இரண்டு மகள்கள் என வறுமையில் வாழ்ந்த ஒரு குடும்பம் இருந்தது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாடு சாப்பிடுவதே கஷ்டமாக இருந்தது. ஒரு நாள், அந்த அன்னம் அவர்களின் நிலைமையைக் கவனித்து, அந்த ஏழை குடும்பத்திற்கு உதவ முடிவு செய்தது. தனது பொன்னை போன்ற இறகுகளை ஒவ்வொன்றாகக் கொட்டி, அவற்றை விற்று வாழ்வாதாரம் நடத்த அந்தக் குடும்பத்திற்கு கொடுக்க ஒரு திட்டத்தை வகுத்தது.


அன்னம் தங்கள் வீட்டிற்கு வந்து தனது பொன்னிறகங்களை கொடுப்பதாகச் சொன்னபோது, அந்தத் தாய் ஆச்சரியப்பட்டாள். அன்றிலிருந்து, அன்னம் தினமும் தனது இறகுகளை உதிர்க்கத் தொடங்கியது, அதன் மூலம் அந்தக் குடும்பம் சந்தோஷமாகவும் வசதியாகவும் வாழ போதுமான வருமானத்தை ரூடுவு;ட்டத் தொடங்கியது. ஆனால், அந்தத் தாய் பேராசை பிடித்து, அடுத்த முறை அன்னம் தங்கள் வீட்டிற்கு வரும்போது அதன் எல்லா இறகுகளையும் பறித்து விட முடிவு செய்தாள்.


அந்தத் தாய் அன்னத்தின் இறகுகளைப் பறித்தபோது, அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஏனென்றால், அவை இனி பொன்னிறமாக இல்லை, சாதாரமான இறகுகளாகவே இருந்தன. தான் மனமுவந்து தன் பொன்னிற இறகுகளை கொடுத்ததாகவும், தாய் தன்னை வலுக்கட்டாயாகப் பறித்ததால், இறகுகள் இனி அதே மாதிரி இருக்காது என்றும் அன்னம் விளக்கம் அளித்தது. தாய் அன்னத்திடம் மன்னிப்பு கேட்டாள், ஆனால் அன்னம் அதே தவறை மீண்டும் செய்ய மறுத்துவிட்டு, பேராசைப்பட வேண்டாம் என்று அந்தக் குடும்பத்திடம் கேட்டுக்கொண்டு பறந்து போய்விட்டது.


நீதிக்கதை வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

 நீதிக்கதை


வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?


இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை சிறிதும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள். உடனே தளபதி வீரர்களை அழைத்து, சரி வீரர்களே... நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்... வெற்றியா தோல்வியா... நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்... சரியா?


ஆ.. நல்ல யோசனை... அப்படியே செய்வோம்... என்று வீரர்கள் சம்மதித்தனர். தளபதி நாணயத்தைச் சுண்டினான். காற்றில் மிதந்து, சுழன்று சுழன்று தரையில் நாணயம் விழுந்தது. தலை...! வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு. அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது! துணைத் தளபதி வந்தான். நாம் வென்றுவிட்டோம்... கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா... என்றான் உற்சாகத்துடன். ஆமாம்... உண்மைதான் என்று அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி. நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!


Monday, May 20, 2024

நீதிக்கதை வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

 நீதிக்கதை


வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?



இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை சிறிதும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள். உடனே தளபதி வீரர்களை அழைத்து, சரி வீரர்களே... நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்... வெற்றியா தோல்வியா... நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்... சரியா?



ஆ.. நல்ல யோசனை... அப்படியே செய்வோம்... என்று வீரர்கள் சம்மதித்தனர். தளபதி நாணயத்தைச் சுண்டினான். காற்றில் மிதந்து, சுழன்று சுழன்று தரையில் நாணயம் விழுந்தது. தலை...! வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு. அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது! துணைத் தளபதி வந்தான். நாம் வென்றுவிட்டோம்... கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா... என்றான் உற்சாகத்துடன். ஆமாம்... உண்மைதான் என்று அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி. நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!


Tuesday, April 30, 2024

Tamil Moral stories | freekidzstoriesonline |நிழலின் கதை | Tamil Moral Stories | Short stories in tamil

 நீதிக்கதை


நிழலின் கதை


ஒரு காலத்தில், மரங்கள், ஆறுகள் மற்றும் மலைகள் சூழ்ந்த ஒரு சிறிய கிராமத்தில், விளையாடுவதை விரும்பும் ஒரு மகிழ்ச்சியான சிறுவன் இருந்தான். ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு இருண்ட நிழலைக் கண்டான், அது அவரை வருத்தப்படுத்தியது. உலகம் நிறமற்றதாகவும் மந்தமாகவும் இருப்பதைப் போல உணர்ந்தார், அப்படிப்பட்ட உலகில் அவன் வாழ விரும்பவில்லை.


சிறுவன் அழுவதை ஒரு தேவதை கண்டு என்ன பிரச்சனை என்று கேட்க வந்தது. நிழல் கருமையாகவும் வண்ணமற்றதாகவும் இருப்பதால் தன்னை சோகப்படுத்துகிறது என்று சிறுவன் விளக்கினான். பறவைகள் கீச்சுவதையும் ஆறு ஓடுவதையும் போன்ற உலகின் அழகான விஷயங்களை கவனித்து சுற்றிலும் பார்க்குமாறு தேவதை சிறுவனை கேட்டது.


சூரியனை நோக்கி உட்காருமாறு தேவதை சிறுவனிடம் கூறியது, கிராமம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை சிறுவன் பார்த்தான். வயல்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்தன, மற்ற குழந்தைகள் சுற்றி ஓடி, சிரித்து மகிழ்ந்தனர். நிழல் தனக்கு பின்னால் இருப்பதையும் அதில் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்பதை சிறுவன் உணர்ந்தான். 


நீதி: 

வாழ்க்கை கடினமாக இருக்கும்போதும், விஷயங்கள் வண்ணமயமற்றதாகத் தோன்றினாலும், கவனம் செலுத்த வேண்டிய அழகான ஒன்று எப்போதும் இருக்கும். வாழ்க்கையின் நல்ல விஷயங்களை நாம் பாராட்ட வேண்டும், இருண்ட நிழல்கள் நம்மை கீழே இறங்க விடக்கூடாது

இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have Full Faith In God | Tamil Moral stories | freekidzstoriesonline

 இறைவன் மேல் முழு நம்பிக்கை வேண்டும் | Have Full Faith In God | Tamil Moral Stories

ஓர் ஆற்றங்கரை அருகே சிறுகுடிசை ஒன்றை கட்டிக்கொண்டு அதில் பால்காரி ஒருத்தி வசித்து வந்தாள். அவளிடம் சில பசுக்கள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் பாலை அடுத்த ஊரில் விற்று, அதனால் கிடைக்கும் சின்ன வருவாயில் அவள் வாழ்ந்து வந்தாள். 


அந்த ஆற்றின் மறு கரையில் ஒரு கோயில் இருந்தது. அந்த கோயில் குருக்கள் சுவாமி அபிஷேகத்திற்காக நாள் தோறும் பால் கொண்டு வந்து கொடுக்குமாறு அந்த பால்காரியிடம் கூறியிருந்தார். 


பால்காரியும் ஒரு படகின் மூலம் மறு கரைக்கு வந்து குருக்களிடம் பால் கொடுத்து வந்தாள். அந்த பால்காரி இறைவனின் திருப்பெயரை எப்பொழுதும் உச்சரித்த படியும், அவரிடம் முழு நம்பிக்கை வைத்திருந்தாள். 


தன்னை எந்த நிலையிலும் இறைவன் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை அவளை சுறுசுறுப்பாக இயங்க வைத்தது. கோயில் குருக்களுக்கு இறைவனிடம் பரிபூரண பக்தி கிடையாது. ஏதோ கடமைக்காக இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வந்தார்

ஆனால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதில் வல்லவராக இருந்தார். ஒரு முறை படகு காரன் தாமதம் செய்ததனால் அவள் குறிப்பிட்ட நேரத்திற்கு பால் கொண்டு வந்து கோவில் குருக்களிடம் கொடுக்க முடியவில்லை. 


குறித்த நேரத்திற்கு அவள் பால் கொண்டு வந்து கொடுக்காததால் கோயில் குருக்கள் அவள் மேல் கோபப்பட்டு, “ஏன் தாமதம்?” என்று கேட்டார். அதற்கு அந்த பால்காரி, “படகுக்காரன் தாமதமாக வந்து படகை எடுத்ததால் தான் தாமதம் ஆயிட்டு” என்றாள். 


அதற்கு அந்த கோவில் குருக்கள், “பெண்ணே, இறைவனின் மேல் முழு நம்பிக்கை வைத்து அவருடைய திருப்பெயரை கூறினால் பிறவி என்னும் பெருங்கடலையே தாண்டி விடலாம். அப்படி இருக்கும்போது உன்னால் இந்த  சிறிய ஆற்றை கூடவா கடக்க முடியவில்லை” என்று கேலியாக பேசினார். 


மறுநாள் முதல் சுவாமி அபிஷேகத்திற்கு குறித்த நேரத்தில் பால் கிடைத்து வந்தது. ஆற்றில் பெருவெள்ளம் வந்தாலும் கூட பால்காரி மட்டும் குறித்த நேரத்திற்கு வந்து பால் கொடுத்து வந்தாள். 


இது கோவில் குருக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவர் பால்காரியை பார்த்து “பெண்ணை, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் கூட அபிஷேக பாலை குறித்த நேரத்தில் கொண்டு வந்து கொடுத்து விடுகிறாயே இது எப்படி?” என்று கேட்டார். 


அதற்கு அந்த பால்காரி, “சுவாமியே, நீங்கள் கூறிய படியே இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவருடைய திருப்பெயரை சொல்லிக் கொண்டே ஆற்றை கடந்து வருகிறேன்” என்றாள்.


தான் விளையாட்டாக சொன்னதை பால்காரி கடைபிடிக்கிறாள் என்று எண்ணிய அவர், இறை நம்பிக்கையாவது அவளை காப்பாற்றுவதாவது என்று சந்தேகப்பட்டு அந்த பால்காரியை பின் தொடர்ந்து வந்தார். 


“நீ எவ்வாறு ஆற்றை கடந்து வருகிறாய்? என்பதை எனக்கு காட்டுவாயா” என்றார். பால்காரி அவரை அழைத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு சென்றாள். இறைவன் மேல் முழுநம்பிக்கை வைத்து இறைவனுடைய திருப்பெயரை சொல்லிக் கொண்டே ஆற்றின் மேல் நடந்து சென்றாள். 


கோயில் குருக்கள் தாமும் அப்படியே செய்ய எண்ணி இறைவனின் முழு நம்பிக்கை இல்லாமல் வெறுமனே வாயால் இறைவனுடைய திருப்பெயரை சொல்லிக்கொண்டே ஆற்றில் இறங்கினார். 


அவ்வளவுதான் அவர் நீருக்குள் மூழ்கினார். உடனே பால்காரி வந்து அவரை காப்பாற்றி கரை சேர்த்தாள் அவள் கோயில் குருக்களை பார்த்து, “சுவாமி இறைவன் மேல் முழு நம்பிக்கை இல்லாமல் வெறுமனே வாயால் அவர் திருப்பெயரை உச்சரிப்பதால் பயணம் இல்லை” என்றாள். கோயில் குருக்கள் தலை குனிந்தார்.


 நீதி : இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அவருடைய திருப்பெயரை நாம் உச்சரித்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இறைவன் நம்மை காப்பாற்றுவார். எனவே, நாம் இறைவன் மேல் நம் முழு நம்பிக்கையை வைப்போம்.

Wednesday, April 17, 2024

நீதிக்கதை | விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும். Moral Stories in Tamil

 நீதிக்கதை


விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.


அடர்ந்த வனப் பகுதியில் தனது ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு விட்டு, விட்டு ஒரு மரத்தின் அடியில் காணப்பட்ட நிழலில் உறங்கிக் கொண்டு இருந்தான் ஒரு இடையன்.


அப்பொழுது வானத்தில் ஒரு கழுகு தனது இரையைத் தேடியபடி வட்டமிட்டுக் கொண்டு இருந்தது. அந்தக் கழுகு இந்த இடையனின் ஆட்டு மந்தையில் இருந்த ஒரு ஆட்டுக் குட்டியை கண்டது. அதனைப் பார்த்த மாத்திரத்தில் விரைந்து வந்து அதனை தூக்கிக் கொண்டு பறந்தது.


இந்தக் காட்சியை வெகு நேரமாக ஒரு காகம் பார்த்துக் கொண்டு இருந்தது. கழுகைப் போலவே செயல்பட்டு தானும் அந்த மந்தையில் இருக்கும் ஆட்டுக் குட்டிகளில் ஒன்றை தூக்கி வர வேண்டும் என விருப்பம் கொண்டது. ஆனால், கழுகின் சக்தி என்ன, தனது சக்தி என்ன என்பதை அந்தக் காகம் சிந்திக்க மறந்தது.


இடையனோ நல்ல நித்திரையில் இருந்தான்.


அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி அந்தக் காகம் ஆட்டு மந்தைக்குள் விரைந்து புகுந்தது. ஒரு சிறு ஆட்டுக் குட்டியை தேர்ந்தெடுத்து அதன் மேல் அமர்ந்து தனது நகம் கொண்டு அதனை பலமாகப் பற்ற நினைத்தது. எனினும், 


அந்த ஆடு ஒரு குட்டி ஆடாகவே இருந்தாலுமே கூட, அதன் ரோமம் மிகவும் அடர்த்தியாக இருந்ததால் அந்தக் காகத்தால் அந்த ஆட்டை பற்றிக் கொள்ள இயலவில்லை. 


பிறகு மிகவும் சிரமப்பட்டு தனது நகங்களை மெல்ல அதன் ரோமங்களுக்குள் விட்டு பற்றிக் கொண்டது. ஆனால், ஆட்டுக் குட்டி மிகவும் கனமாக இருந்ததால் அந்தக் காகத்தால் அதனை தூக்க முடியவில்லை. 


அதனால் தப்பித்தால் போதும் என அந்த ஆட்டுக் குட்டியை விட்டு, விட்டுப் பறந்து செல்ல நினைத்தது.


ஆனால், அந்தக் காகத்தின் கால்கள் அந்த ஆட்டுக் குட்டியின் ரோமங்களில் நன்றாக சிக்கிக் கொண்டதால், காகம் தனது கால்களை வெளியே எடுக்க முயற்சி செய்யும் போது அந்த ஆட்டுக் குட்டிக்கு வலி எடுத்தது. 


அதனால் அந்த ஆட்டுக் குட்டி கத்தியது. காகமும் தப்பிக்க முடியாமல் வசமாக மாட்டிக் கொண்டு கரைந்தது. இதனால் அந்த ஆட்டு மந்தைகளில் இருந்த அனைத்து ஆடுகளும் நடப்பது அறியாது பயம் கொண்டு கனைத்தது. இதனால் அந்த இடமே பேர் இரைச்சல் அடைந்தது.


இடையன் இந்தப் பேர் இரைச்சலைக் கேட்டு, "தனது ஆடுகளுக்கு என்ன நேர்ந்ததோ!" என்று பயந்து கண் விழித்துக் கொண்டான். பிறகு அவன் நடந்ததை அறியாது சுற்றி, சுற்றி என்ன ஏது என்று பார்த்தான். 


உடனே தனது ஆட்டை நகங்களால் காயப்படுத்திக் கொண்டு இருந்த அந்தக் காகத்தை கண்டான். அத்துடன் அவ்விடம் நோக்கி விரைந்து ஓடி வந்தான். பிறகு தனது தடியால் அந்தக் காகத்தை அடித்தே கொன்றான்.


பாவம் அந்தக் காகம் தனது சக்திக்கு மீறிய செயலைச் செய்யப் போய் பரிதாபமாகத் தனது உயிரை விட்டது.


நீதி: எப்போதுமே விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.


Saturday, March 16, 2024

ஆந்தைகளின் மொழி - அக்பர் பீர்பால் கதைகள் - Akbar and Birbal stories

 அன்று காலை, அக்பரைப் பார்த்த உடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார்.



அக்பர் அன்று வேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் சிந்திப்பார்.

சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து, பீர்பலின் மீது செலுத்திய அக்பர் “நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும், “மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்குக் கிடையாது” என்றார் பீர்பல்.

 “பொய் சொல்லாதே, பீர்பல்! நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே தெரியாதது போல் நடிக்கிறாய். மிதமான குளிர்வீதம் இந்தக் காலைப் பொழுதில் வேட்டைஆடச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து! உன் கருத்து என்னவோ?” என்றார். “தங்களின் கருத்தே என்னுடைய கருத்தும்!” என்றார் பீர்பல். “அப்படியானால், நீயும் என்னுடன் வேட்டையாட வர வேண்டும்!” என்றார் அக்பர்.

“தங்கள் கட்டளைப் படி நடக்க சித்தமாக இருக்கிறேன்” என்று பணிவுடன் பீர்பல் பதிலளித்தார். “பீர்பல்! நீ உடனிருந்தால் களைப்பே தெரிவதில்லை. நாவில் உனக்கு இத்தனை வலிமையைக் கொடுத்த இறைவன், உடலிலும் கொடுத்து இருக்கிறாரா என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றார். “ஆகட்டும் பிரபு!” என்றார் பீர்பல்.

சற்று நேரத்திற்குப்பின், அக்பர் ஒரு பெரிய படை வீரர்களின் அணியுடன் காட்டை நோக்கிப் புறப்பட்டார். பீர்பலும் அக்பருடன் சென்றார். காட்டினுள் நுழைந்தபிறகு, அக்பரின் வீரர்கள் தாரை, தப்பட்டை ஆகியவற்றை உரக்க ஒலித்துக் காடே அதிரச் செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்டு காட்டு மிருகங்கள் மிரண்டு அங்குமிங்கும் சிதறி ஓட, அக்பரும், மற்றவர்களும் அவற்றைத் துரத்திச் சென்று, கொன்று குவித்தனர்.

திடீரென ஒரு புலி புதரிலிருந்து சீறிப் பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது. தாரை, தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல்அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது, அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன்மீது எறிய, பயங்கரமாக உறுமிக் கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. புலி இறந்து விட்டதால் அக்பர் உற்சாகமுற்றுக் கையை உயர்த்திக் கூச்சலிட, சுற்றியிருந்த வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மாலைக்குள் அக்பர் மற்றொரு புலியையும் வீரத்துடன் வேட்டையாடிக் கொன்றார். பிறகு அனைவரும் சென்று ஓய்வு எடுக்க, அக்பர் தனியாக அமர்ந்து பீர்பலுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

மாலை மங்கிய நேரம்! பகல் முழுவதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தன. அவற்றின் இனிமையான குரல்களை இருவரும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்துஇருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின.

அவற்றின் ஒலியை வெகு நேரம் உன்னிப்பாகக் கவனித்த அக்பர், “இந்த ஆந்தைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றார் பீர்பல். “பிரபு! அவற்றின் மொழி எனக்குத் தெரியும்!” என்றார் பீர்பல்.

“அப்படியா? பிறகு ஏன் சும்மாயிருக்கிறாய்? அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்!” என்றார் அக்பர். “பிரபு! அவையிரண்டில் ஒன்று மணப்பெண்ணின் தந்தை! மற்றொன்று பிள்ளையின் தந்தை! அவை வரதட்சிணையைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றன. பிள்ளையின் தந்தை மிருகங்களே இல்லாத நாற்பது காடுகள் சீர்வரிசையாகத் தர வேண்டும் எனக் கேட்கிறது. பெண்ணின் தந்தை தன்னால் இருபது காடுகள் மட்டுமே தரமுடியும் என்று சொல்கிறது,” என்றார் பீர்பல்.

தொடர்ந்து, “பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை மேலும் தனக்கு ஆறு வாரகாலம் அவகாசம் தந்தால், மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும் என்கிறது,” என்றார். “இது என்ன உளறல்? மிருகங்களேஇல்லாத காடுகள் அதற்கு எங்கிருந்து கிடைக்கும்? இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக் கொண்டது?” என்றார் அக்பர்.

“அது உளறவில்லை! சரியாகத்தான் சொல்கிறது. நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அது அப்படிப் பேசுகிறது!” என்றார் பீர்பல். “சரிதான்! ஆந்தைதான் உளறுகிறது என்று நினைத்தால் நீயும் உளறுகிறாயே!” என்றார் அக்பர். “நான் உளறவில்லை, பிரபு! ஆந்தையும் உளறவில்லை! நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே, காட்டில்உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது.

அதுபோல் இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்களேயில்லாமல் செய்து விட்டீர்கள். இன்னும் அடுத்த ஆறு வாரத்தில் நீங்கள் இருபது முறை வேட்டையாடினால், மீதியுள்ள இருபது காடுகளும் காலியாகிவிடும்! அந்த தைரியத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது!” என்றார் பீர்பல்.

பளீரென முகத்தில் அறைந்ததுபோல் இருந்த பீர்பலின் விளக்கம் அக்பரை மௌனமாக்கி விட்டது. தன் செய்கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்த அக்பர், “பீர்பல்! என் கண்களை நீ இன்று திறந்து விட்டாய்! என்னுடைய மகிழ்ச்சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று புரிந்து கொண்டேன். இன்றுமுதல் வேட்டையாடுவதை நிறுத்தி விடப் போகிறேன்” என்றார் அக்பர்.

பீர்பலுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. இத்தனை எளிதாக அக்பரின் மனம் மாறும் என்று அவர் நினைக்கவில்லை. “பீர்பல்! என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் இப்போது சொன்னதைக் கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்!” என்றார் அக்பர்.

“சக்கரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி என்னால் மிருகங்கள்அற்றக் காடுகளை வரதட்சிணையாக அளிக்க முடியாது என்று அது கூறுகிறது!” என்று பீர்பல் கூறவும், அக்பர் பலமாகச் சிரித்தார்.

Friday, March 15, 2024

நீதிக்கதை மன்னனின் ஆணவம்

நீதிக்கதை


மன்னனின் ஆணவம்


மகாராஷ்டிரத்தின் பெரு வீரராக விளங்கிய ஒரு மன்னன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈடுபடுத்தி ஒரு அழகான பெரிய கோட்டையைக் கட்டினார். இருந்தாலும் அவர் சிறிது கர்வம் மிகுந்தவர். 


அத்தனை தொழிலாளி களுக்கும் உணவு அளித்தார். அவர்கள் யாவருக்கும் தான் தான் இலவசமாக உணவு அளிப்பதாகக் கர்வம் கொண்டிருந்தார். 


மன்னனின் குருநாதர் இந்த கெட்ட எண்ணத்தைக் கவனித்து விட்டு, மன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினார்.


ஒரு நாள் குரு மன்னனின் அரண்மனைக்கு வந்தபொழுது, வழக்கம் போல் அவனை வானளாவப் புகழ்ந்தார்.


"மகராஜ்! எல்லாப் பணிகளும் தங்கள் கருணையால் தான் நடக்கிறது." என்று கூறினார். அதைக் கேட்டு மன்னனும் பெரு மகிழ்ச்சி அடைந்தார். பிறகு குருவானவர், மன்னனிடம் ஒரு கல்லைக் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார். எதற்காக குரு தன்னைக் கல்லை உடைக்கச்

சொல்கிறார் என்ற சந்தேகம் எழுந்தாலும், மன்னனும் ஆர்வமாக அந்தக் கல்லை உடைத்தார். அட! என்ன ஆச்சரியம் ! அதிலிருந்து ஒரு தேரை துள்ளிக் குதித்துத் தாவித் தாவிச் சென்றது. அந்தக் கல்லிலிருந்து நீரும் வடிந்தது. மன்னன் அதை விநோதமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார்.


"மன்னா! ஒன்று கேட்கிறேன்.சொல்ல முடியுமா?" என்று குரு கேட்டார்.

"சொல்லுங்கள் குருவே! காத்திருக்கிறேன்" என்றான் மன்னன்.


"மன்னா! இந்தக் கல்லுக்குள் இருந்த தேரைக்கு யார் உணவளித்தார்கள் என்று கூறமுடியுமா?" என்று கேட்டார் குரு .


குரு கேட்ட கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். உடனே வெட்கித் தலை குனிந்தார் மன்னர்.


"குருவே! என்னை மன்னித்துவிடுங்கள். எல்லா வற்றிற்கும் மேலாக இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவன்தான் இப்படியாக செய்கிறார் என்பதும் உண்மை. 


அவன் தூண்டிவிட்டதினால்தான் நான் யாவருக்கும் உணவுஅளித்தேன். இறைவன் இல்லாது ஒரு செயலும் நிகழாது. என்னை மன்னித்து விடுங்கள். என் கர்வம் அகன்றது" என்று கூறி தான் எல்லாவற்றிற்கும் ஒரு கருவிதான் என்பதை உணர்ந்து கொண்டான்.


நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனால் செய்யப்படுகிறது. அதற்கு நம்மைக் கருவியாக அமைக்கிறான் இறைவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


Friday, March 1, 2024

Door and the Nail | motivation story

 

Door and the Nail | motivation story

There lived  a father and son in a town. Father Sekar was very good. The son’s name was Ani and he lived by cheating everyone on the  town. 

His father gave him lot of advices but he wasn’t ready to hear on Sekar’s words. 

Ani gave no response to Sekar’s words. 

So his father told that he is going to do nailing on the door for each mistakes. But Ani didn’t mind his father. 

But every day Sekar started nailing in their house door for his each mistake of cheating others. 

Years passed, One day night Ani came back to the house seeing thousands of nails at his home door. The scene began to cross his mind. 

He touched the door and nails on the door made him realise how selfish he has been and he felt guilty for his mistakes.

The next day Ani apologized to his father Sekar for his mistakes. Sekar replied that “it’s good you realised your mistakes but to get rid of this, you must help someone each day and for each good deeds you do I will remove a nail from the door”. 

From the next day Ani started to help others and his father removed a nail for his each help. But to Ani the speed of doing good to others was not as speed as the bad he did. 

Each day after reaching home he used to check the door and would think of how to make those nails to zero. He wanted to good as much as soon he could. 

Days went and his father too fallen bed sick. There was only one nail left, Ani helped a family from flood water, and so father Sekar took back the last nail left too. 

Ani asked his father “All the nails are taken back so I  have been changed to a good person now, right.?” 

Father replied him to touch the door and come back. He touched the door it was full of holes and the stigma  was left there, thus Father said that, “the nails were on the door because of your mistakes, the nails were taken back because of the goodness you did, but the stigma remains there. 

This is how the mistakes you did will be, making a mistake will be easy but the results of your mistakes will be unbearable, so living without doing a sin will be good, son". 

Wednesday, February 28, 2024

நீதிக்கதை சொர்க்கமும் நரகமும் Moral stories for kids Moral stories in tamil,

 நீதிக்கதை


சொர்க்கமும் நரகமும்


ஒரு ஊரில் ஒரு மிகப் பெரிய பணக்காரன் இருந்தான். ஆனால் என்ன பயன்? யாருக்கும் ஒன்றுமே கொடுத்து உதவாத ஒரு கருமியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு


சொர்க்கத்தையும் நரகத்தையும் காண வேண்டும் என்று மிகுந்த ஆசை.


ஒருநாள் உறங்கும் பொழுது அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனது ஆசை அறிந்து அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். 


அவர் சொற்படியே அவருடன் சென்றான் அந்தக் கருமி. முதலில் அவனை எங்கு அழைத்துச் சென்றார் தெரியுமா? அவனை நரகத்திற்குக் கூட்டிச் சென்றார். அவர்கள் சென்றபோது அங்கு உணவு உண்ணும் நேரமாக இருந்தது. 


பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவை மிக்க பல பதார்த்தங்களும் யாவும் இருந்தன. அவரவர்களுக்கு சாப்பிட தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு கூட பரிமாறப்பட்டது. 


அந்த உணவைக் கண்டவுடன் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால் அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்கவே முடியவில்லை, 


தவிர கையை மடக்கி வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்லக் கூட முடியவில்லை. பரிதாபமான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதானோ?


அறுசுவை உணவு எதிரே இருந்தால் கூட அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு அவற்றில் உள்ள உணவை வீணாக்கிவிட்டனர். பின்னர் தாங்க முடியாத பசியினால் கீழே உட்கார்ந்து அழுதார்கள். இது தினமும் நடக்கும் சம்பவம்.


பிறகு அந்த பெரியவர் அந்தப் பணக்காரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதே போல உண்ணும் வேளைதான். 


நரகத்தில் இருந்தது போலவே அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடுகள் எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.


அங்கிருந்தவர்களுக்குக் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கு அருகே கொண்டு செல்வதற்காக அவர்கள் கையை மடக்கமுடியவில்லை. நீட்டியபடியே இருந்தது. ஆனால் அவர்களுக்கு உக்தி தெரிந்தது. நீட்ட முடியும் ஆனால் மடக்கத்தானே முடியவில்லை என்று எண்ணி, ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாய் அருகில் நீட்டி அவருக்கு ஊட்டினார். 


மடக்கத்தானே முடியாது கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாம் அல்லவா? எவ்வளவு சாமர்த்தியம்? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.


இத் தருணத்தில் கருமி கனவில் இருந்து மீண்டான். சொர்க்கம் என்பது தனியே எங்கும் கிடையாது. ஒருவருக் கொருவர் உதவி செய்து வாழ்வதையே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான்.


யாவருக்கும் பகிர்ந்து உண்ணாமல் தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது தான் நரகம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.


அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான். 


அதனால் நாமும் பலருக்கு அவர்கள் தேவை புரிந்து பல நன்மைகள் புரிந்தால் நாம் சொர்க்கத்தை இந்த வாழ்விலேயே கண்டுவிடலாம்.

Sunday, February 25, 2024

நீதிக்கதை தற்பெருமை வேண்டாம்

 நீதிக்கதை


 தற்பெருமை வேண்டாம்


காட்டில் சிங்கம் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது, அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.


அதுவரை சும்மா இருந்த சேவல் "கொக்கரக்கோ" எனக் கூவ ஆசைப்பட்டு, உடன் சத்தமாகக் கூவியது.


சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும், நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.


ஒருவரையும் காணவில்லை. ஆதலால் மறுபடியும் படுத்துத் தூங்கியது. சிங்கம் படுத்துத் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.


சேவலின் சத்தத்தில் சிங்கத்தால் தூங்க முடிய வில்லை. கலவரமடைந்து எழுந்த சிங்கம், மரத்தின் மேலே பார்த்தது. சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.


"ஏய், ஏன் இப்படி காட்டுத் தனமாகக் கத்துகிறாய் என் தூக்கத்தைக் கெடுக்காதே" என எச்சரிக்கை செய்தது


"நான் எவ்வளவு அழகாகப் பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கின்றாயே. நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அதனால் பாடிக் கொண்டு தான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ என அதிக சப்தத்துடன் கூவியது.


அதன் சப்தம் சிங்கத்தின் காதில் மிகவும் கொடூரமாக விழுந்ததால், இனிமேல் என்ன சொன்னாலும் சேவல் கேட்காது என்ற முடிவெடுத்து, இடத்தை மாற்றிக் கொள்வோம் என முடிவு செய்து ஓடியது.


சிங்கம் ஓடும் பொழுது ஒரு கழுதையைப் பார்க்காமல் ஓடியது. ஆனால் கழுதையோ, "சிங்கம் தன்னைக் கண்டு தான் பயந்து ஓடுகிறது" எனக்கூறி கத்தியது.


சிங்கம் காதில் இது விழுந்தவுடன், திரும்பி வந்து கழுதையைத் தாக்கிக் கொன்றது.


நீதி: வீணான தற்பெருமை மனதில் எண்ணக் கூடாது. அப்படி எண்ணுபவர் வேதனை அடைவார்கள்.


Monday, February 12, 2024

" படிப்பு சுமையல்ல...."

 " படிப்பு சுமையல்ல...."

...........................................



மாணவ செல்வங்கள் தங்கள்  பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு பாடம் இருந்தாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும்.


அத்துடன் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போது கவனத்தை எங்கும் சிதற விடாமல் ஊன்றி கவனிக்க வேண்டும்..


மற்றும் எதையும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும்.ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத் தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும்.


ஒரு கிராமத்தில் அறிஞர் ஒருவர் இளைஞர்களுக்குக் கல்வி போதித்து வந்தார். அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே…


எனவே நிதானமாகவும் அதே சமயம் மாணவர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்து வந்தார்.


ஒரு நாள் தன் மாணவர்களைப் பார்த்து, நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.


படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்று தான் பலரும் சொல்வீர்கள்.


ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்…


ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான்.


ஊரே அவனை பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது. எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர்.


ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.


எப்படி? என்றார்கள் மற்றவர்கள்..


இந்தப் பசு கன்றுக் குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகி விட்டது. 


இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை என்றான்.


இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல.படித்தப் பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார் அந்த அறிஞர்...


ஆம்.,தோழர்களே..,


அனைத்துப் பெற்றோர்களும்,

ஆசிரியர்களும் கூறும் ஒரே புகார் தங்கள் குழந்தையை தம்மால் கட்டுப்படுத்தவே 

முடியவில்லை என்பது தான்.


உங்கள் குழந்தைக்கு உண்மையான பிரச்சனை என்னவென்று கண்டறியுங்கள், 


அவர்கள் எதில் அதிக ஆர்வம் 

செலுத்துகின்றனர், என்ன செய்தால் குழந்தையை திசை திருப்ப முடியும் என்று கண்டறிந்தாலே போதும், அவர்களை சுலபமாக வழிக்குக் கொண்டு வந்து விடலாம்.✍🏼

Tamil moral story🌻தமிழ் குழந்தைகள் கதை🌻கிளியின் நட்பு🌻AN INTRESTING STORY WITH A MESSAGE


 

Thursday, February 1, 2024

The story of justice Do not forget to thank | Moral stories in english | Short stories in english | Deer story Kids stories

 The story of justice


Do not forget to thank


A spotted deer was frolicking happily in forest.


Some of the hunters saw the dot. Today anyway, they wanted to capture this point. They also like deer


He clearly understood that they were coming towards him.


We thought that we should escape from their clutches anyway. Without a moment's delay, it leaped and ran in a four-legged leap. hunters are not letting go either. They followed and ran.


The deer has run a long way. Fatigue prevailed and could not run. I thought it would be better if I went to rest for a while.


It also relaxed a little where it stood. Hearing the sound of people coming, he looked up. The same hunters seem not to let go.


They continued to chase them tirelessly. The sin threw the deer away. They had recently arrived and wondered "how to escape from them".


Beside it the vegetation grew lush and bushy. Entered the bush and quietly hid. Hide in the bush


The fawn was standing motionless.


The Hunters who ran near it, were constantly running in search of the deer. It was only after they left that place that deer felt relieved. She was happy that she had saved her life. It jumped out of the bush.


The spotted deer was already hungry. Just at that time, it came running after seeing the hunters. So to get rid of its hunger, it tasted the green leaves of the bush and grazed.


Not being able to see the deer for a while, the hunters turned back the way they had come. The fawn ran back into the bush to hide from the hunters.


But now bush did not help the baby goat. The reason is that it has eaten all the thick green leaves on the bush. Hence, the fawn could not be hidden by the leaves.


In the eyes of the hunters who came near it

The fawn knew. So he could not run away immediately. Due to this, the fawn woke up trapped by the wolves. "By our hasty wit, we have eaten the leaves that saved our lives."


"The Lord has given punishment for the act of forgetfulness". Tears flowed at the thought.


Justice: Those who forget to give thanks are worse than animals.

न्याय की कहानी धन्यवाद देना न भूलें

 न्याय की कहानी


धन्यवाद देना न भूलें


एक चित्तीदार हिरण कनकम में खुशी से घूम रहा था।


कुछ वाडर्स ने बिंदु देखा। आज वैसे भी वे इस बात पर कब्ज़ा करना चाहते थे. उन्हें हिरण भी पसंद है


वह स्पष्ट रूप से समझ गया कि वे उसकी ओर आ रहे हैं।


हमने सोचा कि हमें किसी भी तरह उनके चंगुल से भागना चाहिए। एक पल की भी देरी किए बिना, वह उछला और चार पैरों वाली छलांग लगाकर दौड़ा। वाडर भी जाने नहीं दे रहे हैं. वे पीछा करके भागे।


हिरण बहुत दूर तक भाग चुका है। थकान हावी हो गयी और दौड़ नहीं सका. मैंने सोचा कि अगर मैं कुछ देर आराम कर लूं तो बेहतर होगा।


जहां वह खड़ा था वहां उसे थोड़ा आराम भी मिला। लोगों के आने की आहट सुनकर उसने ऊपर देखा। वही वाडर्स जाने नहीं दे रहे हैं।


वे लगातार उनका पीछा करते रहे। पाप ने हिरण को फेंक दिया। वे हाल ही में आये थे और सोच रहे थे कि "उनसे कैसे बचा जाए"।


इसके बगल में वनस्पति हरी-भरी और झाड़ीदार हो गई। अपुधार में घुसकर चुपचाप छिप गया। झाड़ी में छिप जाओ


हिरण का बच्चा निश्चल खड़ा था।


इसके पास दौड़ने वाले वडार लगातार हिरण की तलाश में दौड़ रहे थे। उनके वहां से चले जाने के बाद ही मान को राहत महसूस हुई। वह खुश थी कि उसने अपनी जान बचा ली। वह झाड़ी से बाहर कूद गया।


चित्तीदार हिरण पहले से ही भूखा था। उसी समय वह वाडरों को देखकर दौड़ता हुआ आया। इसलिए अपनी भूख मिटाने के लिए उसने झाड़ी की हरी पत्तियों को चखा और चरने लगा।


कुछ देर तक हिरण को न देख पाने के कारण शिकारी जिस रास्ते से आये थे उसी रास्ते से वापस लौट गये। हिरण का बच्चा शिकारियों से छिपने के लिए वापस झाड़ियों में भाग गया।


लेकिन अब अपुदार ने बकरी के बच्चे की मदद नहीं की। इसका कारण यह है कि इसने झाड़ी की सारी मोटी हरी पत्तियाँ खा ली हैं। अत: हिरण का बच्चा पत्तों से छिप नहीं सका।


इसके निकट आने वाले जलपरियों की दृष्टि में

हिरण का बच्चा जानता था. इसलिए वह तुरंत भाग नहीं सका. इससे हिरण का बच्चा भेड़ियों के जाल में फँसकर जाग उठा। "अपनी जल्दबाजी की बुद्धि से, हमने वे पत्तियाँ खा लीं जिनसे हमारी जान बच गई।"


"प्रभु ने भूलने के कृत्य का दण्ड दिया है।" यह सोच कर आँसू बह निकले।


जस्टिस: जो लोग धन्यवाद देना भूल जाते हैं, वे जानवरों से भी बदतर हैं।

நீதிக்கதை செய் நன்றி மறவாதே | kidzstoriesonline | bedtime stories | 1000 moral stories

 நீதிக்கதை


செய் நன்றி மறவாதே


கானகத்தில் புள்ளிமான் ஒன்று மகிழ்ச்சியாக துள்ளித் திரிந்து கொண்டிருந்தது.


வேடர்கள் சிலர் புள்ளிமானைப் பார்த்து விட்டனர். இன்று எப்படியும், இந்தப் புள்ளிமானை பிடித்து விட வேண்டும் என நினைத்தனர். அவர்களும் மான்குட்டியைப் பிடிக்கும்


நோக்கில் தம்மை நோக்கித் தான் வருகிறார்கள் என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டது.


நாம் அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் எப்படியும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தது. சிறிதும் தாமதியாமல் நான்கு கால் பாய்ச்சலில் துள்ளிக் குதித்து ஓடியது. வேடர்களும் விடுவதாய் இல்லை. தொடர்ந்து பின்பற்றி ஓடி வந்தார்கள்.


நீண்ட தூரம் ஓடி வந்துவிட்டது மான்குட்டி. களைப்பு மேலிட மேலும் அதனால் ஓடவும் முடியவில்லை. சற்று இளைப்பாற்றிச் சென்றால் தான் நல்லது எனவும் நினைத்தது.


அதே போல் நின்ற இடத்திலேயே சற்று இளைப்பாறியது. ஆட்கள் வரும் சப்தம் கேட்டு, எழுந்து பார்த்தது. அதே வேடர்கள் தம்மை விடுவதாக இல்லை போலிருக்கிறது.


தொடர்ந்து அயராமல் விரட்டிக் கொண்டும் வந்து விட்டார்கள். பாவம் மான் குட்டிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர்கள் சமீபத்தில் வந்து விட்டார்களே "எப்படித் தப்புவது அவர்களிடம்" என்றும் யோசித்தது.


அதன் அருகில் தாவரங்கள் பசுமையால் வளர்ந்து புதர் போல் மண்டிக் கிடந்தன. அப்புதருக்குள் நுழைந்து அமைதியாக ஒளிந்து கொண்டது. புதருக்குள் ஒளிந்து


கொண்ட மான் குட்டி அசைவற்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.


அதன் அருகில் ஓடி வந்த வேடர்கள், தொடர்ந்து மானைத் தேடி ஓடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் தான், மானுக்கு நிம்மதி வந்தது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டோம் என மகிழ்ச்சி அடைந்தது. துள்ளிக் குதித்து புதருக்கு வெளியே வந்தது.


புள்ளிமான் குட்டி ஏற்கனவே பசியோடு இருந்தது. அச்சமயத்தில் தான் வேடர்களைப் பார்த்துவிட்டு தலை தெறிக்கவும் ஓடி வந்தது. எனவே அதன் பசிக் களைப்பு நீங்க, அந்தப் புதரிலுள்ள பசுமையான இலைகளையே ருசித்து மேய்ந்து விட்டது.


சற்று நேரத்தில் மானைக் காண முடியாமல், வேடர்கள் வந்த பாதையிலேயே திரும்பினார்கள். வேடர்கள் பார்வையில் படக்கூடாதென, மீண்டும் புதருக்குள் ஓடி ஒளிந்தது மான்குட்டி.


ஆனால், இப்பொழுது அப்புதர் மான்குட்டிக்கு உதவவில்லை. காரணம் புதரில் இருந்த அடர்ந்த பசுமையான இலைகளையெல்லாம் தான், அது தின்று விட்டதே. எனவே, மான்குட்டியை இலைகளால் மறைக்க முடியவில்லை.


அதன் அருகில் வந்த வேடர்கள் கண்களில்

மான்குட்டி தெரிந்தது. அதனால் உடனே தப்பித்து ஓட முடியவில்லை. இதனால், வேடர்களிடம் மாட்டிக் கொண்டு மான்குட்டி விழித்தது. "நம் அவசர புத்தியால் தானே, நம் உயிரைக் காப்பாற்றிய இலைகளைத் தின்று விட்டோம்."


"நன்றி மறந்து செய்த செயலுக்கு ஆண்டவன் தண்டனை தந்து விட்டாரே". என எண்ணி கண்ணீர் வடித்தது.


நீதி : செய் நன்றி மறந்தவர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள்.


நீதிக்கதை தற்பெருமை வேண்டாம்

 நீதிக்கதை


 தற்பெருமை வேண்டாம்



காட்டில் சிங்கம் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது, அதன் அருகே உள்ள மரக்கிளையில் ஒரு சேவல் ஏறி அமர்ந்திருந்தது.


அதுவரை சும்மா இருந்த சேவல் "கொக்கரக்கோ" எனக் கூவ ஆசைப்பட்டு, உடன் சத்தமாகக் கூவியது.


சேவலின் கொக்கரக்கோ சத்தம் கேட்டதும், நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த சிங்கம் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தது.


ஒருவரையும் காணவில்லை. ஆதலால் மறுபடியும் படுத்துத் தூங்கியது. சிங்கம் படுத்துத் தூங்கிய சிறிது நேரத்தில் மறுபடியும் சேவல் கூவியது.


சேவலின் சத்தத்தில் சிங்கத்தால் தூங்க முடிய வில்லை. கலவரமடைந்து எழுந்த சிங்கம், மரத்தின் மேலே பார்த்தது. சேவல் பெருமையுடன் நின்று கொண்டு இருந்தது.


"ஏய், ஏன் இப்படி காட்டுத் தனமாகக் கத்துகிறாய் என் தூக்கத்தைக் கெடுக்காதே" என எச்சரிக்கை செய்தது


"நான் எவ்வளவு அழகாகப் பாடுகிறேன். என் பாட்டு உனக்குப் பிடிக்கவில்லை என்கின்றாயே. நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அதனால் பாடிக் கொண்டு தான் இருப்பேன் என்றபடி மீண்டும் கொக்கரக்கோ என அதிக சப்தத்துடன் கூவியது.


அதன் சப்தம் சிங்கத்தின் காதில் மிகவும் கொடூரமாக விழுந்ததால், இனிமேல் என்ன சொன்னாலும் சேவல் கேட்காது என்ற முடிவெடுத்து, இடத்தை மாற்றிக் கொள்வோம் என முடிவு செய்து ஓடியது.


சிங்கம் ஓடும் பொழுது ஒரு கழுதையைப் பார்க்காமல் ஓடியது. ஆனால் கழுதையோ, "சிங்கம் தன்னைக் கண்டு தான் பயந்து ஓடுகிறது" எனக்கூறி கத்தியது.


சிங்கம் காதில் இது விழுந்தவுடன், திரும்பி வந்து கழுதையைத் தாக்கிக் கொன்றது.


நீதி: வீணான தற்பெருமை மனதில் எண்ணக் கூடாது. அப்படி எண்ணுபவர் வேதனை அடைவார்கள்.


Recent Posts

Popular Posts